ராமர் கோயிலுக்கு வராத காங்கிரஸை புறக்கணிக்க வேண்டும்

55பார்த்தது
ராமர் கோயிலுக்கு வராத காங்கிரஸை புறக்கணிக்க வேண்டும்
இந்தியாவில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்து அடுத்த கட்ட தேர்தல் ஏப்ரல் 26 இல் நடைபெற உள்ளது இந்த நிலையில் அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேசத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர், ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணித்த காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும், உங்களிடம் இரண்டு வீடுகள் இருந்தால் அவற்றில் ஒரு வீட்டை பிடுங்கி வேறு பிரிவினருக்கும் காங்கிரஸ் வழங்கிவிடும், உங்களிடம் இரண்டு வண்டி இருந்தால் அவற்றை ஒன்றை பிடுங்கிவிடும் என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி