ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

1091பார்த்தது
சி பி ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் மற்றும் பன்னாட்டு மனிதநேய அமைப்பு இணைந்து நீலகிரி மாவட்டத்தில் 19 பள்ளிகளுக்கு 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ , மாணவிகளை ஓவியப்போட்டி, விலங்கினங்களை நேசிப்போம் என்ற தலைப்பில் 2600 பேருக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு ஒவ்வொரு பள்ளிக்கும் தலா மூன்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் கட்டபெட்டு வனசரகர் செல்வராஜ் , வனவர் ராமதாஸ், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட், சமூக ஆர்வலர் போஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக கள அலுவலர் குமரவேல் வரவேற்றார் இயற்கை விவசாயி ராம்தாஸ் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி