கோடை விடுமுறை, வார இறுதி விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். அதன்படி, நீலகிரிக்கு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். .
அத்துடன், கன்னியாகுமரியில் சூரிய உதயம் காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது.