திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விருது

76பார்த்தது
திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விருது
திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் 2023-24ஆம் ஆண்டின், தமிழ்நாடு அரசின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியா் அன்பழகன் விருது, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

இவ்விருதினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா். விருதை திருச்செங்கோடு அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழி பெற்றுக் கொண்டாா்.

தொடர்புடைய செய்தி