சென்னையில் சித்த மருத்துவர் வெட்டிப் படுகொலை

17272பார்த்தது
சென்னையில் சித்த மருத்துவர் வெட்டிப் படுகொலை
சென்னை, ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரை சேர்ந்தவர் சிவம் நாயர் (72) சித்தா மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி பிரசன்னா (60). நேற்றிரவு சிவம் நாயர் அவரது மனைவி பிரசன்னா ஆகிய இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இருவரையும் கொலை செய்து விட்டு நகை, பணம் திருடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.





கொலை செய்து விட்டு நகை, பணம் திருடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி