பிள்ளாநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் கனமழை

58பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குருசாமிபாளையம், குருக்கபுரம், கூனவேலம்பட்டி, ஆயிபாளையம், பொன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மாலை சுமார் 4 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

தொடர்புடைய செய்தி