நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் இன்று திமுக சார்பாக எம்பி திருச்சி சிவா வாக்கு சேகரித்தார்.
பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் உள்ள பாவடி அருகே திமுக கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து எம்பி திருச்சி சிவா அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வாக்கு சேகரித்தார். மேலும் உடன் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், பேரூராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.