திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தாக்குதல் முயற்சி

46571பார்த்தது
நெல்லை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் திமுக உள்ளூர் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நெல்லையில் நேற்று (ஏப்ரல் 6) தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் கூட்டத்தில் பங்கேற்றபோது, கட்சியின் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியதில், நிர்வாகிகளிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணனை சிலர் தாக்க முயன்றனர். ஆனால் அமைச்சரின் ஆதரவாளர்கள், அவரை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் அவர் காரில் புறப்பட்டு சென்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி