'கடும் வறட்சி - பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்'

81பார்த்தது
'கடும் வறட்சி - பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்'
பேரிடர் நிதியை விடுவிக்காத பாஜக அரசுக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கர்நாடகாவில் கடும் வறட்சியால் 48 லட்சம் ஏக்கரில் பயிர் சாகுபடி பொய்த்துப்போனதால் 38 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒன்றிய அரசு ரூ.4,663 கோடி ஒதுக்க வேண்டும் எனவும் கூறினார். கடந்த காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் வறட்சி காரணமாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடகா கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி