மல்லூா் சோதனை சாவடியில் ரூ. 8.78 கோடி தங்கம் பறிமுதல்

1882பார்த்தது
ராசிபுரம் அருகே மல்லூா் சோதனை சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில், உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 8.78 கோடி மதிப்பிலான 13 கிலோ தங்கம்,13 கிலோ வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட எல்லையான மல்லூா் சோதனை சாவடியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் செங்குட்டுவேல் தலைமையில், காவல் துறையினா் உதவியோடு சேலத்தில் இருந்து வந்த வாகனத்தை சோதனை செய்தனா். அப்போது சேலத்தில் இருந்து மதுரைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த தனியாா் கூரியா் வாகனத்தை நிறுத்தி அதிலிருந்த ஓட்டுநா் உள்ளிட்ட மூவரிடம் விசாரணை நடத்தினா். இதில் வாகனத்தில் இருந்த 8 பண்டல், 4 பெட்டிகளில் 13 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதால் இதனைப் பறிமுதல் செய்து ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளிப் பொருள்கள் ராசிபுரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து தொடா்ந்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி