மாஜி அமைச்சர் நாசர் பேச்சால் வேட்பாளர் அதிர்ச்சி

39890பார்த்தது
மாஜி அமைச்சர் நாசர் பேச்சால் வேட்பாளர் அதிர்ச்சி
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று திறந்த வேனில் ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாசர் தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அதிகளவில் இருந்த நிலையில் அவர்களை எப்படி கீழே இறக்குவது என தெரியாமல் இருந்த நாசர், நல்லவர்கள் எல்லாம் வண்டியை விட்டு கீழே இறங்குங்கள், கெட்டவர்கள் எல்லாம் வண்டியில் ஏறுங்கள் என கூறியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாசரின் இந்த பேச்சு, வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி