அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு

58பார்த்தது
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு
நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நவரத்தின விழா நடந்தது.

நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், சிங்களாந்தபுரம் புதிய கிளை சார்பில் மாவட்ட தலைவர் பிரபு, மாவட்ட செயலர் ஜெகதீஷ் தலைமையில் நவரத்தின விழா ராசிபுரம், போடிநாயக்கன்பட்டி ஸ்ரீ விக்னேஷ் மகாலில் நடந்தது.

சபரிமலை மகரவிளக்கு காலங்களில் உயிர்காக்கும் சேவையில் பணியாற்றிய பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, திருச்செங்கோடு கே. எஸ். ஆர். கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கிப் பாராட்டினர்.

புதிய கிளைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 90 கிளைகள் படிவங்களை முழுமையாக வடிவமைத்த தேர்தல் அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சிங்களாந்தபுரம் கிளை 25ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்தி