வார்ப்பிங் தொழிலாளி மாயம் போலீசார் விசாரணை

66பார்த்தது
குமாரபாளையம் அருகே வசிக்கும் வார்ப்பிங் தொழிலாளி மாயமானார்.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் விக்னேஷ், 28. ஈரோடு சைசிங் மில்லில் வார்ப்பின் வேலை செய்து வந்தார். இவர் ஜூலை 10ல் காலை 10: 00 மணியளவில் வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. இவரை இவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில், இவரது மனைவி தீபா, 23, புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், காணாமல் போன விக்னேஷை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி