ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்

60பார்த்தது
ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
ராமநவமி விழாவின் ஒரு கட்டமாக நேற்று குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம் நடந்தது.

 

ராமநவமி விழாவையொட்டி    குமாரபாளையம்   விட்டலபுரி,  பாண்டுரங்கர் கோவிலில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. ராமர்,  சீதை கொலு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. நேற்று ராமர், சீதா தேவி சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன.  பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், இனிப்புகள்  மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் ராமர், சீதை சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில்,  கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள்  கோவில்களில் சுவாமிகளுக்கு  சிறப்பு அபிஷேக,  அலங்கார,  ஆராதனைகள் நடத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி