இரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டி மனு.

61பார்த்தது
ஆனங்கூர் இரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டி மக்கள் நீதி மய்யம் மனு.



 

 குமாரபாளையம்,   ஆனங்கூர் இரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டி மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார்.

 

இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

 

குமாரபாளையத்திலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில்  ஆனங்கூர் அருகே இரயில்வே கேட் உள்ளது.  இரயில் வரும் வேளையில் கேட்  போட்டு விட்டால், சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வாகன ஓட்டிகள்  காத்திருக்க வேண்டியுள்ளது. தறி ஓட்டுபவர்கள், ஸ்பின்னிங் மில்லுக்கு வேலைக்கு செல்பவர்கள், மற்றும் கல்லூரி, பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள்,  அப்பகுதி பொதுமக்களுக்கும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அதிக மக்கள் இந்த சாலையைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆகையால் தாங்கள் பொதுமக்களின்  சிரமங்களை கருத்தில் கொண்டு இவ்வழியில் மேம்பாலம் அமைப்பதற்கு உரிய துறையிடம் ஆவண செய்யுமாறு மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுமக்களின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி