மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆக்கூரில் உள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் வசந்த நவராத்திரி விழாவில் மூன்றாம் நாள் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் லலிதா சஹஸ்ரநாம ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்ற சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.