பருத்தி விற்பனைக்காக காத்திருக்கும் விவசாயிகள்

55பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அறுவடை செய்த பருத்தியை விற்பனை செய்வதற்காக உரிய விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். தற்பொழுது செலவு செய்த தொகை கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பருத்திக்கு உரிய விலை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி