மனு அளிக்க குவிந்த பொதுமக்கள்

55பார்த்தது
மயிலாடுதுறை அருகே சித்தர் காடு ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்கங்களில் மண்டல இணை பதிவாளர் தயாள விநாயகர் அமுல்ராஜ் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல் உட்பட பலர் உடன் இருந்தனர். இந்த முகாமில் மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

தொடர்புடைய செய்தி