மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் மீது புகார்

1892பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சிறுநீர் கழிக்க வெளியே சென்ற 12 ஆம் வகுப்பு மாணவனை உடற்கல்வி ஆசிரியர் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சாதியை சொல்லி இழிவாக திட்டியதாக மாணவர் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து காயத்துடன் நேற்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மாணவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி