மயிலாடுதுறையில் பன்றியை கடித்துக் கொன்ற சிறுத்தை - பதற்றம்

6885பார்த்தது
மயிலாடுதுறையில் நேற்று இரவு செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். தொடர்ந்து இன்று செம்மங்குளம் பகுதிக்கு மீண்டும் சிறுத்தை அதிகாலையில் வருகை தந்து வாய்க்காலில் இருந்த பன்றியை கடித்துக் கொண்டதால் மீண்டும் பதற்றம் அதிகரித்தது. மேலும் சிறுத்தை அச்சத்தால் மயிலாடுதுறையில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :