முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாளையொட்டி இன்று (ஆகஸ்ட் 17) அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை முரசொலி வளாகத்தில் உள்ள முரசொலி மாறனின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், எம்.பி., தயாநதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.