படகு மூழ்கியதில் 90க்கும் மேற்பட்டோர் பலி.. (வீடியோ)

44764பார்த்தது
ஆப்ரிக்க நாடான மொசாம்பிக் நாட்டில் மிகவும் சோகமான சம்பவம் நடந்துள்ளது. கடலில் படகு கவிழ்ந்ததில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்தின் போது படகில் 130 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். படகில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கடற்கரையில் குவியல் குவியலாக சடலங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி