சீனாவில் 41 வயதான கர்ப்பிணியை நாய் பயமுறுத்தியதால் அவரின் 4 மாத கரு கலைந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. கர்ப்பமடைவதற்காக மூன்று வருடங்களுக்கும் மேல் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தையை இழந்த யான் என்ற பெண் நாயின் உரிமையாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து, நாயின் உரிமையாளர் லீக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கர்ப்பிணிக்கு இழப்பை ஏற்படுத்தியதால் 10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.