தென்காசி அருகே விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து புதிய பேருந்து நிலையம், கடையநல்லூர் மணிகூண்டு அருகே பிரச்சாரம் மேற்கொண்ட அவர் தேர்தல் பரப்புரையை முடித்து விட்டு திரும்பிய போது கரட்டுமலை அருகே காரை பறக்கும் படையினர் நிறுத்தினர், சோதனையில் எந்தவொரு ஆவணமும் கிடைக்காத நிலையில் அங்கிருந்து கிளம்பி சென்றார்