அக்காவிடம் அத்துமீறல்.. தீர்த்துக்கட்டிய செய்த தம்பி

585பார்த்தது
அக்காவிடம் அத்துமீறல்.. தீர்த்துக்கட்டிய செய்த தம்பி
காக்களூர் பகுதியில் உள்ள தனியார் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் ராபர்ட் என்பவர் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். அதே காம்ப்ளெக்சில் உள்ள மற்றொரு நிறுவனத்தில் சரண்யா (26) என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து வீடு திரும்ப லிப்டில் கீழே இறங்கியுள்ளார் சரண்யா. அதே லிப்டில் வந்த ராபர்ட், வலுக்கட்டாயமாக சரண்யாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அங்கு ராபர்ட் வந்துள்ளார். அவரை சரண்யாவின் தம்பி மௌலி (23) கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே ராபர்ட் உயிரிழந்தார். பின்னர் மௌலியை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி