புனேவில் பள்ளி மாணவனை ஆசிரியை கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ வைரலான நிலையில் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தகவலின்படி, சில மாணவர்கள் பள்ளி வகுப்பில் இடையூறு ஏற்படுத்தியதால் ஆத்திரமடைந்த ஆசிரியை அதில் ஒருவரை கொடூரமாக தாக்கியிருக்கிறார். அதை அங்கிருந்த மாணவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.