குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை

964பார்த்தது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு கால சந்தி பூஜை, மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணிக்கு மாவிளக்கு பூஜை, ராக்கால பூஜை நடைபெற்றது. இதில் குலசேகரன்பட்டினம் சுற்று வட்டார பெண்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.