உசிலம்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேகம்.

76பார்த்தது
உசிலம்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேகம்.
மதுரை மாவட்டம்
உசிலம்பட்டி அருகே , முத்தாலம்மன், சந்தன மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, பூச்சிபட்டி - மாலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன், சந்தன
மாரியம்மன் திருக்கோவில் 12 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு செய்து, முத்தாலம்மனுக்கும், சந்தன
மாரியம்மனுக்கும் சுமார் 51 அடி உயரம் கோபுரம் எழுப்பி இன்று (ஆக. 18) கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

நேற்று கணபதி ஹோமத்துடன் பூஜைகளை துவங்கி மூன்று கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணாவதி யாகம் முடிந்ததும் கடம் புறப்பாடாகி கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து கருவறையில் உள்ள முத்தாலம்மன், சந்தனமாரியம்மன் பீடத்தில் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி