மதுரையில் உடல்நலக்குறைவால் காவலர் மரணம்.

60பார்த்தது
மதுரையில் உடல்நலக்குறைவால் காவலர் மரணம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டில் படுக்கையில் போலீஸ்காரர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சர்க்கரைபட்டியில் வசித்து வருபவர் காசிநாதன்(43). இவர் மதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் வீட்டில் ஓய்வில் இருந்தார். நேற்றிரவு (செப்.,20) உணவு அருந்தி விட்டு படுக்க சென்றவர் இன்று (செப். 21) காலை படுக்கையில் இறந்து கிடந்தார். இவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரில் வாலாந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி