"மாணவர்கள் ஹெல்மெட் இன்றி வந்தால் அனுமதிக்க வேண்டாம்''

59பார்த்தது
"மாணவர்கள் ஹெல்மெட் இன்றி வந்தால் அனுமதிக்க வேண்டாம்''
கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் என கோவை மாநகர காவல்துறை கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்லூரி நுழைவாயில் முன்பு 'No Helmet No Entry' வாசகம் கொண்ட பதாகை வைக்க கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 'No Helmet No Entry' முன்னெடுப்பு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி