உசிலம்பட்டியில் பல ஆண்டுகளாக வீணாகும் குடிநீர்

62பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி குடிநீர் குழாய் உள்ளது இதில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வீணாக சாலைகளில் தண்ணீர் செல்கிறது குடிநீர் குழாய்களை நகராட்சி நிர்வாகம் முறையாக சரி செய்வது கிடையாது. இதனால் தேசிய நெடுஞ்சாலை துறையும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் புதிதாக போடப்பட்ட சாலையில் அனைத்திலும் மீண்டும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. மீண்டும் சாலையில் குண்டும் குழியுமாக வரப்போகிறது இதனால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் மதுரை ரோட்டில் உள்ள அனைத்து உடைப்புகளும் சரி செய்ய வேண்டுமென மதுரை ரோட்டில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி