மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வாசலில் மயங்கி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பரமசிவம் (25) என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சைக்கிளில் சென்ற போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து காயமடைந்தார். இதில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
இந்த சம்பவத்தில் அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் நீண்ட நாட்களாக குணமாகவில்லை. இந்நிலையில் வீட்டு வாசலில் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.