மதுரை அருகே திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நேற்று (ஆகஸ்ட் 26) முருகப் பெருமான் மயில் வானத்தில் எழுந்துருவினார்.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகையின் போது தங்கமயில் வாகனத்தில் எழுந்துருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அதனடிப்படையில் நேற்று (ஆகஸ்ட் 26) கார்த்திகை என்பதால் முருகப்பெருமான் தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு வீதியுலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசித்தனர். நேற்று விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.