திருப்பரங்குன்றம் உண்டியலில் 160 கிராம் தங்கம்.

52பார்த்தது
திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 27, 05, 453 ரூபாய் ரொக்கமும், 160 கிராம் தங்கமும், 2கிலோ 40 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 27 லட்சத்து 05 ஆயிரத்து 453 ரூபாய் ரொக்கமாகவும், 160 கிராம் தங்கமும், 2 கிலோ 40 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் ரூ. 27 லட்சத்து, 05 ஆயிரத்து 453 ரூபாய், தங்கம் 160 கிராம், வெள்ளி 2 கிலோ 40 கிராம் இருந்தது.

இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுரேஷ், அறங்காவலர் குழு தலைவர் சத்தியபிரியா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மணிச்செல்வன், சண்முகசுந்தரம், பொம்ம தேவன், இராமையா முன்னிலையில் ஶ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயா வேத பாடசாலை மாணவர்கள், திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி