திருமங்கலம் - Thirumangalam

திருமங்கலம்: விஷப் பூச்சி கடித்து கூலித் தொழிலாளி பலி

திருமங்கலம்: விஷப் பூச்சி கடித்து கூலித் தொழிலாளி பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழ உரப்பனூர் வடக்கு தெருவில் வசிக்கும் துளசிமலை மகன் ஜெயவிருமான் (44) என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.  இவர் வயக்காட்டில் கடந்த 17ம் தேதி கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்த போழுது அடையாளம் தெரியாத விஷம் பூச்சி கையில் கடித்ததில் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் நேற்று (டிச. 20) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி வனபேச்சி திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా