அரசு பேருந்தில் திடீர் புகையால் பரபரப்பு

69பார்த்தது
அரசு பேருந்தில் திடீர் புகையால் பரபரப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசு நகர் பேருந்தில் தீடீர் புகையால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று (ஆக.,30) மாலை 6 மணிக்கு காரியாபட்டிக்கு அரசு நகர் பேருந்து புறப்பட்டது. ஆனந்தா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கும் போது பேருந்து இன்ஜின் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது.

இதனால் பயணிகள் அலறியடித்தபடி இறங்கி ஓடினார்கள். இன்ஜின் மேல் மூடியை திறந்த போது வயர்கள் எரிந்து கொண்டிருந்தை பார்த்தனர். அருகேயிருந்த கடைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. உடனடி செயல்பாட்டால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து பயணிகள் மாற்று பேருந்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி