பேருந்துகளை நிறத்தக்கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம்: முற்றுகை

63பார்த்தது
பேருந்துகளை நிறத்தக்கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம்: முற்றுகை

மதுரை மாவட்டத்தின் எல்கை பகுதியான தே. கல்லுப்பட்டி அருகேயுள்ள A. பாறைப்பட்டி, சின்ன சிட்டுலொட்டி, ஆகிய கிராமங்கள் மதுரை - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
இங்கிருந்து பள்ளி கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணாக்கர்கள், விவசாயிகள், பணிகளுக்கு செல்வோர் ஆகியோர் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதற்காக பயன்படுத்தும் A. பாறைப்பட்டி கிராமத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்லும் நிலை பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது.

பேருந்துகள் நிறுத்தாமல் செல்வதால் வேலையை விடுத்து கால்நடை மேய்க்கும் தொழிலாளர்களாக மாறும் பெண் பட்டதாரிகள் - இலவச மகளிர் பேருந்து சேவை இருந்து வரும் நிலையில் பேருந்து இல்லாத பெண்கல்வி கேள்விக்குறியாகும் அவலம்!!

நிறுத்த உத்தரவு இருந்தும் நிற்காமல் செல்லும் பேருந்துகள் - பேருந்துகளை நிறத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி