மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் கப்பலுார் முன்னாள் ராணுவ வீரர் சதீஷ்குமார் (44). இவரது மனைவி கஸ்துாரி (40). நேற்று முன்தினம் (ஆக.,27) இருவரும் மதுரை ராணுவ கேண்டீனில் பொருட்களை வாங்கிக் கொண்டு தனித்தனி இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது கப்பலுார் காலனி அருகே சதீஷ்குமார் முன்னால் சென்றார். பின்னால் வந்த கஸ்துாரியின் இருசக்கர வாகனத்தை மறித்த ஹெல்மெட் அணிந்த இருவர், 12 பவுன் தாலிச் செயினை பறித்துச் தப்பி சென்றனர்.
இதில் கீழே விழுந்து காயமடைந்த கஸ்துாரி, கணவருக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்தார். சதீஷ்குமார் மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு
இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.