திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்.

80பார்த்தது
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திருமண நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம் என அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்கு தெருவில் வசிக்கும் கருப்பையா என்பவருடைய மகள் அருணா தேவி (19) என்பவர் பி கே என் காலேஜில் மூன்றாம் ஆண்டு பிசிஏ படித்து வருகிறார். இவருக்கும் எட்டு நாலி புதூரை சேர்ந்த சக்தி குமார் என்பவருக்கும் வரும் செப்டம்பர் 8ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான பணிகளை இரு விட்டார்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டை விட்டு வெளியே சென்று அருணா தேவி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தந்தையை கருப்பையா திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றார்கள்.

தொடர்புடைய செய்தி