மாநில அளவிலான சதுரங்க போட்டி முதலிடம்

79பார்த்தது
மாநில அளவிலான சதுரங்க போட்டி அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை: -

மாநில அளவிலான சதுரங்க போட்டி சேலத்தில் உள்ள ஜெய்ராம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (7. 7. 24) நடைபெற்றது. இப்போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். ஆறு சுற்றுக்கள் கொண்டதாக இப்போது நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியம் அ. செட்டியார்பட்டி துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவி S. யாகஶ்ரீ 9 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஆறு சுற்றுகளில் விளையாடி, அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகள் பெற்று, முதலிடம் பிடித்து அசத்தினார். வெற்றி பெற்ற மாணவிக்கு
ரூ. 12000 மதிப்புள்ள ஹீரோ சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

அ. செட்டியார்பட்டி துவக்கப்பள்ளி மாணவர்கள் S. யாகஶ்ரீ , க. வேதாஸ்ரீ, இ. இஸ்பா டுஜானா ஆகிய மூன்று மாணவிகள் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று சைக்கிள் பரிசாக பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி