மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் சாலையில் உள்ள மரைக்காயர்புரம் எனும் இடத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற 27 வயதுடைய நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.