போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி..

58பார்த்தது
மேலூரில், உலக போதைப்பொருள் எதிர்ப்புத் தினத்தையொட்டி அரசு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்.


மதுரை மாவட்டம் மேலூரில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மேலூர் மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறை சார்பில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மேலூர் பேருந்து நிலையம் வரை, போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறும் மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி