காணாமல் போன பணம்..! மாணவனை தாக்கிய ஆசிரியை

80பார்த்தது
நெல்லை வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் காயத்ரி தேவி என்ற ஆசிரியையின் ரூ.3500 பணம் மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தியபோது 8ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட நிலையில் தகவலறிந்து வந்த போலீசார், பள்ளி மாணவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தி இருக்கின்றனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி