ரயில் இன்ஜின் மோதி இருவர் பலி

76பார்த்தது
ரயில் இன்ஜின் மோதி வடமாநில தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலயே பலி


மதுரை சிலைமான் தேசிய நெடுஞ்சாலை சிலார்ஷா நகர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நடந்து கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் நோக்கி நடைபெற்ற ரயில்வே இன்ஜின் சோதனை ஓட்டத்தின்போது இன்ஜின்மோதி உத்திரபிரதேச மாநிலம் கோராக்பூர் பகுதியை சேர்ந்த வடமாநில தொழிலாளர்களான மதுசூதன் ப்ராஜபதி (30) மற்றும் க்யானந்த பிரதாப் கௌத் (22) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலயே உயிரிழப்பு - சிலைமான் காவல்துறை மற்றும் ரயில்வே இருப்புபாதை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டைல்ஸ் ஒட்டும் பணிகளுக்காக தங்கி பணி செய்துவந்த நிலையில் பணி முடிந்து ரயில்வே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி