சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ரயிலில் குளிர்சாதன பெட்டிகள்

74பார்த்தது
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ரயிலில் குளிர்சாதன பெட்டிகள்
கோடைக்கால சிறப்பு ரயிலான சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ரயிலில் 2 படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளுக்கு பதிலாக 2 குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இந்த ரயில்களில் இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்குப் பதிலாக இரண்டு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் சேர்க்கப்படும் எனவும், இந்த பெட்டிகள் மே 23ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களில் 1 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 8 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்பட உள்ளது.
Job Suitcase

Jobs near you