சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள்: அவதி

74பார்த்தது
மதுரையில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

தொடர்மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்று குளம் போல் காட்சியளிக்கிறது.


குறிப்பாக காமராஜர் சாலையில் அமைந்துள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்பாக முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்று வருகின்றனர்.

மாநகராட்சி பணியாளர்கள் நீரை அகற்றும் பணியில் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி