சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கிய மேயர்

81பார்த்தது
சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கிய மேயர்
மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் ச. தினேஷ்குமார், இ. ஆ. ப. , ஆகியோர் இன்று (10. 06. 2024) வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, கல்விக்குழுத் தலைவர் ரவிச் சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, மாமன்ற உறுப்பினர் ஜென்னியம்மாள் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி