மதுரை: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் உள்ள 35 சிறைவாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இரண்டு வார கால சட்ட தன்னார்வல பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அந்த வகையில் மதுரை மத்திய சிறையில் இன்று சட்ட தன்னார்வல பயிற்சி துவக்க விழா உச்சநீதிமன்ற நீதியரசர் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறைத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.