இறந்தவரின் அடையாளம் தெரிந்து உறவினர்களிடம் ஒப்படைப்பு

3626பார்த்தது
இறந்தவரின் அடையாளம் தெரிந்து உறவினர்களிடம் ஒப்படைப்பு
மதுரை வைகையாற்றில் இறந்து கிடந்த நபரின் அடையாளம் தெரிந்தது.

மதுரை வைகையாற்றில் அழகர் இறங்கிய நாளன்று மாலை 6 மணியளவில் வைகையாற்றில் ஆண் சடலத்தை மீட்டு மதிச்சியம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இறந்தவர் பரசுராமா என்ற பாபு (55) என்றும், இவரை காணவில்லை என அவரது உறவினர்கள் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நேற்று மாலை அவர் இறந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருக்கும் செய்தி சமூக ஆர்வலர் நேதாஜி ஹரிகிருஷ்ணன் மூலம் கிடைக்கப்பெற அவரது உறவினர்கள் இறந்தவரின் உடலை பார்த்து உறுதி செய்த பிறகு அதனை பெற்றுச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி