பெங்களூருவில் கடந்த 22ம் தேதி பயங்கர விபத்து நடந்தது. ராஜாஜிநகர் 6வது பிளாக்கில் மோகன் (25) என்ற வாலிபர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. அந்த வாலிபர் பைக்குடன் தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்ததில் மோகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகடி சாலை ஸ்டேஷன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.